--- --:--:-- --

ரூ.5,000 கடன் வாங்க சென்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதம்..!

3

கிருஷ்ணகிரியில் போதையில் காரை ஓட்டி சென்றதால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்துள்ளது.

 

இருந்த போதிலும் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டி சென்றதால் அந்த பகுதி மக்கள் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை காட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டியது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார். விசாரணையில் உறவினர் ஒருவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்க சென்று கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

 

Right Menu Icon