கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்..!
மேகாலயா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மரப்பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கேரோ மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் இரு ஊர்களை இணைக்கும் மரப்பாலம் அடித்து செல்லப்பட்டது.






