உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ..!
உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கிக் கிளையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 9 மணியளவில் யூகோ வங்கியின் கிளையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





