வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்..!
சுந்தரா நகர் மாவட்டத்தில் உள்ள சைலா கிராமத்தில் வசிப்பவர்கள் வானத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உலக பந்துகள் விழுந்ததாக தெரிவித்துள்ளனர். வானத்தில் இருந்து மர்ம பொருட்கள் வயல்களில் சிதறி கிடந்தது.
இந்த நிகழ்வால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக அந்த மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் விசித்திரமான கருப்பு மற்றும் வெள்ளை உலக பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாலை சுமார் 5 மணியளவில் 5 கிலோ எடையுள்ள முதல் பெரிய கருப்பு பொருள் விழுந்தது. கிராமப்புற பகுதியில் இதேபோன்று பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதையடுத்து கிராம மக்கள் காவல்துறை அளித்த தகவலை குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இந்த விசித்திரமான உலோகப் பந்து செயற்கைக்கோள்களில் இருந்த குப்பைகள் என கூறப்படுகிறது.





