நடுவானில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை..!
விமான பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவருடன் சக பயணி ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விமானநிலைய காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
விமான பயணத்தின் பொழுது பயணிகள் உறங்கிக்கொண்டிருந்த போது பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






