பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பல்லி..!
திருத்தணியில் கூட்டுறவு மண்டக சாலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசுப் பொருட்களில் பல்லி இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுள்ளார்.
இதில் புளி பார்சலில் இரண்டு பல்லிகள் இருந்துள்ளது. இதுகுறித்து ரேஷன் கடையில் கேட்ட பொழுது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பயனாளி நந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.





