விதிமுறைகளை மீறி இரவில் செயல்படும் உணவகங்களுக்கு அபராதம்.!
விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி இரவில் செயல்படும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் நடந்து சென்று இரவு நேர ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்பொழுது விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.





