கொரோனா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பணியாளர்களிடம் வாக்குவாதம்..!
வேலூர் அருகே தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்கு கிராமத்தில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் வெற்றி என்கிற விக்னேஷ் ஆகிய 2 பேர் சுகாதாரப் பணியாளர்களை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.






