ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 23 வயது இளைஞர் வெற்றி..!
நெல்லை மாவட்டம் மேலகுத்தநேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞரை ஊர்மக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மேலகுத்தநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 23 வயது இளைஞர் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் வெற்றிபெற்ற மனோஜ்குமாரை கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்து மேள தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்.







