வேகவைக்காமலே சோறாக மாறும் அரிசி..!
இன்றைய அவசர உலகில் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறும் என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கியுள்ளது. அரசு சார்ந்த அலுவலராக இருந்தாலும் பொதுவான அலுவலாக இருந்தாலும் தங்களது பணி விரைவாக நடைபெற வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் உண்ணும் உணவுகளும் வெகுவிரைவாக தயாரிக்கப்பட்டு வந்துவிட வேண்டும் என இளைய தலைமுறையினர் நினைக்கின்றனர். இதன் விளைவாக துரித உணவுகளுக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் அடிமையாகியுள்ளனர்.
இந்த நிலையில் வேகவைக்காமல் சோறாக மாற்றும் அரிசி தற்போது பிரபலமடைந்து வருகிறது. அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்தால் மட்டும் போதுமானது. இந்த அரிசியை 40 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது.







