விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மூளைச்சலவை: ஆர்.பி. உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு
சமூக வலைதளத்தில் பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்து விஜய்க்கு ஆதரவாக மூளைச்சலவை செய்யப்படுகிறது. விஜய்யின் இந்த மூளைச்சலவையால் இனி அரசியலுக்கு தியாகம், லட்சியம், உழைப்பு, கொள்கை போன்றவை தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
வசீகர வசனங்களை மட்டுமே பேசும் விஜய்க்கு வாக்களித்து, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை மக்கள் வீணடித்துவிட்டனர். ஜென் சீ (Gen Z) தலைமுறையின் இந்த விபரீத முடிவால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கப் புறவாசல் வழி செல்லும் விஜயிடம் கேள்வி கேட்டால் மெளனமே பதிலாகக் கிடைக்கிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.






