உயிரிழந்த மனைவிக்கு சிலை அமைத்த கணவர்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்த தன் மனைவிக்கு சிலை அமைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்துள்ளார். 35 ஆண்டுகள் மனைவியுடன் வாழ்க்கை நடத்தியவர் கோவிந்தராஜ்.
ஒருவர் தனது மனைவிக்கு சிலை அமைத்து அழகு பார்த்ததை சமூக வலைத்தளத்தில் கண்ட கோவிந்தராஜ் தன்னுடைய மனைவிக்கும் அதே போல் ஒரு சிலையை நிறுவ முயற்சித்துள்ளார். மனைவியை போல் ஒரு சிலையை வடிவமைத்து வீட்டில் வைத்துள்ளார்.






