இரண்டு நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ..!
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் நள்ளிரவில் 12.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 106 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி இதே நகரில் ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அதிலிருந்து இரண்டு நாட்களில் இது இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.







