வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நள்ளிரவில் பெய்த மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், தாம்பரம், சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், அடையார், வேளச்சேரி, கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.






