காதலித்த 16 வயது சிறுமி பேச மறுத்ததால் பல்லை உடைத்த இளைஞன்..!
காதலித்த 16 வயது சிறுமி பேச மறுத்ததால் பல்லை உடைத்த இருபது வயது இளைஞன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுமி தனது பாட்டி பராமரிப்பில் இருந்தபோது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாட்டி இறந்தவுடன் பெற்றோர் அரவணைப்பில் இருக்கும் சிறுமி பேச மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சிறுமியை பொது இடத்திற்கு வரவழைத்து வாக்குவாதம் செய்து தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.






