திருமணமான சிறுமியை மீண்டும் திருமணம் செய்த காதலன்..!
Man in handcuffs
ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுமியை திருமணம் செய்த இரு இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த ஜோடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அதில் மணப்பெண் சிறுமி என தெரிய வந்ததையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய காமராஜ் என்பவருக்கு சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை திருமணம் செய்த இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




