முக கவசத்தை காலின் பெருவிரலில் மாட்டியிருக்கும் அமைச்சர்..!
உத்தரகாண்டில் அமைச்சராக இருக்கும் சுவாமி எதீஸ்வர் யானந்த் முக கவசத்தை காலின் பெருவிரலில் மாட்டியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அவர் மட்டுமின்றி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மற்ற இரு அமைச்சர்களான கிஷன் சிங் மற்றும் பாஜக தலைவர்களும் முகக்கவசம் அணிந்து இருக்கவில்லை. அமைச்சரின் இந்த செயலுக்கு உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது கொரொனா அலையை விரட்ட இப்படித்தான் மாஸ்க் அணிய வேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





