அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை..! சுயநினைவை இழந்துவிட்டாரா..?
மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொகுப்பாளர் அர்ச்சனாவிற்கு அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வரும் அர்ச்சனா பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமாக மாறினார். தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை மருத்துவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அர்ச்சனாவின் மகளான சாரா வெளியிட்டிருக்கும் பதிவில் தனது தாயாருக்கு நடைபெற்ற அறுவை மருத்துவம் வெற்றிகரமாக இருந்ததாகவும் அவர் இன்னமும் மயக்கத்திலேயே இருந்து வருவதாகவும் தனது அம்மா விரைவில் சுயநினைவை பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.






