நாளை முதல் தொழு நோயாளிகளுக்கு தடுப்பூசி..!
தமிழகத்தில் உள்ள 3,000 தொழுநோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க விருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.






