எனது கணவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது – மணிகண்டன்
தனது கணவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் மனைவி புகார் அளித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது குடும்பத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் துணை நடிகை ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தும்படி பரிந்துரைப்பதாக கூறியிருக்கிறார்.






