கொரொனா தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்..!
சத்தீஸ்கரில் கொரொனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. கொரொனா தடுப்பூசி பற்றிய வதந்திகளால் வட மாநில பக்தர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் பீஜாப்பூர் இல் உள்ள குருநாத் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கப்படுகிறது. கொரொனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக மொத்த காய்கறி விற்பனையாளர்கள் இடமிருந்து தக்காளியை வாங்கி மக்களுக்கு வழங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






