12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.
இந்த நிலையில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆய்வக பொருட்களை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் கிருமிநாசினி பயன்படுத்திய உடனே எளிதில் பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும், அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.






