12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..!
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளன. கொரொனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து பொது தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேசமயம் தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே வாக்குச்சாவடிகள் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளது.






