புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்..!
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொது இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துவிட்டதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் சட்டவிரோத செயல்களை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி பொது இடங்களில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல் கம்புகள் மற்றும் பேனர்களை வைத்திருத்தல் கோஷங்களை எழுப்புதல் உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.






