இன்று முதல் புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்..!
மகாராஷ்டிராவில் இன்று முதல் புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முடிவு எடுக்கப்படும் என மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மருத்துவ சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், பரிசோதனை வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர். வரும் காலத்தில் அடிப்படை வசதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வதாகவும் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.






