தமிழக அரசின் கொள்கை இருமொழிக் கொள்கை தான்..!
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.






