20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் பெண்..!
கோவையில் ஏழை எளியவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் இல்லத்தரசி ஒருவர் அந்த 20 ரூபாய் கூட கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாகவே வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
புளியகுளத்தை சேர்ந்த சப்ரினா என்ற அந்தப் பெண் நாள்தோறும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இயங்கும் பிரியாணி கடையை சில தினங்களுக்கு முன் திறந்தார்.
20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் அவர் பிரியாணியை பொட்டலங்களாக கட்டி பசிக்குதா எடுத்துக்கோங்க என்று கரும்பலகையில் எழுதி அந்த இருபது ரூபாய் கூட இயலாதவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார்.







