தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்..!
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இலங்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
23ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







