சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உடல்நலக்குறைவு..!
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேல்சிகிச்சைக்காக சசிகலாவை பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







