ஏப்ரலில் பள்ளிகள் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவிப்பு..!
நாடு முழுவதும் நடத்தப்பட்ட இணையவழி கணக்கெடுப்பில் ஏப்ரலில் பள்ளிகள் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரொனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் அக்டோபர் முதல் பகுதி அளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக நாடு தழுவிய இணையவழி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அது புதிய கல்வியாண்டு ஆரம்பமாக ஏற்படலாம். அதில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாக ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு பின் பள்ளிகள் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலை நீங்காமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஆசைப்படுவதாக கூறுகின்றனர். அதேசமயம் 23 சதவீத பெற்றோர் இந்த மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.







