இன்று முதல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன..!
கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் முதுகலையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதேபோல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்குகின்றன. ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணி நேரம் வகுப்பு நடத்தலாம் என்றும் தேவைப்பட்டால் இரண்டு சுற்றுகளாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






