நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது திடீரென விழுந்த கல்..!
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது கற்கள் விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். பரத்பூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் மீது செங்கற்கள் சரிந்து விழுந்தது.
இதில் சாலையில் ஒருவர் மீது கற்கள் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.







