இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ராண்டி. பெற்றோர் உயிரிழந்த பிறகு திடீரென காணாமல் போனவரை அந்த பகுதியினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில் பெற்றோரைப் பறிகொடுத்து விரக்தியுடன் பிறருடன் பேச விரும்பாமலும் அங்குள்ள பாறைகளில் வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினார். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும் அதை ஏற்க மறுத்து அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.







