ஊர்க்காவல் படைக்கு இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக ஊர்க்காவல் படைக்கு இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக இருந்த ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் இரண்டு திருநங்கைகளும் தேர்வாகியுள்ளனர். முதல் முறையாக இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விஜயகுமார் தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கும் பணி ஆணையை வழங்கியுள்ளார்.







