செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது..!
நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்று வட்டார மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடையாறு கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குகிற சூழலில் தற்போது ஏரியில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






