தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக விரைவான அறிவிப்பு வெளியாகும்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் இதனை அவர் கூறியுள்ளார். பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டத்தின் முடிவுகளை வைத்து தான் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் அரசு ஆய்வு மேற்கொண்டு முடிவை வெளியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.






