பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து சுமார் எட்டு கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து சுமார் எட்டு கிலோ எடை கொண்ட கட்டியை அரசு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
புவனகிரியை சேர்ந்த லதா கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவரது கர்ப்பப்பையில் 30 சென்டி மீட்டர் அகலம் கொண்ட கட்டி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்டியை சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.






