வனத்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி..!
புதுச்சேரியில் வனத்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வனத்துறை ஐஎஃப்எஸ் உயர் அதிகாரி தினேஷ் கண்ணன் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது.
கடந்த மாதம் புதுச்சேரியில் பொறுப்பேற்ற தினேஷ் கண்ணன் அலுவலக நேரம் தாண்டி தனது தனிப்பட்ட வாழ்வை கண்காணித்ததில் எல்லை தாண்டி தொல்லை கொடுத்ததாகவும் இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பெண் அதிகாரி ஓர்லெண்ட்பேட்டை போலீசில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரி தினேஷ் கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







