--- --:--:-- --

மது போதையில் ஏ‌சி காருக்குள் படுத்து உறங்கிய நபர் சடலமாக மீட்பு..!

4

நொய்டாவில் மது அருந்திய நிலையில் ஏசி காருக்குள் தூங்கிய நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுந்தர் பன்டிட் என்ற நபர் காரில் ஞாயிற்றுக்கிழமை தூங்கிய நிலையில் காரில் அசைவற்று கிடந்துள்ளார். அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடும்பத்தினர் புகார் அளிக்காத போதும் தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் எஞ்சினில் இருந்து கசிந்த கார்பன் மோனோ ஆக்சைடு போன்ற விஷ வாயு ஏசி காருக்குள் வந்ததால் இதை சுவாசித்ததால் அவர் இறந்திருக்க கூடும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon