கன்னியாகுமரியில் வாகனத்தை காலால் இயக்கிய ஓட்டுனர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்களால் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். மூலசல் பகுதியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் போக்குவரத்து நிறைந்த தக்கலை அழகியமண்டபம் சாலையில் வேனை கால்களால் இயக்கியபடி சென்றார்.
இதனையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரிட்டோ வெளியிட்டிருக்கும் வீடியோவில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.







