பாலியல் தொல்லை கொடுத்தவனை சரமாரியாக தாக்கிய பெண்கள்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பாதிக்கப்பட்ட பெண்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆன்லைனில் புகார் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் கப்பல் நிறுவன ஊழியர் ரம்பாபு என்பவனை சாலையில் வரும்போது மடக்கிப் பிடித்த காட்சிகளும் போலீசாருடன் காத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ரம்பாவை சரமாரியாக தாக்கும்சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.






