சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நிவாரணம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்!
சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரனோ இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம், காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள் போன்றோரை மதிப்புடன் நடத்துவோம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து தங்களுக்கு நிவாரணம் வேண்டியும் தங்களை நலவாரியத்தில் பதிந்து நலவாரிய அட்டை தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்இப்பேரணியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒலி ஒளி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.







