காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!
திருவண்ணாமலை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மோத்தகல் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 45 நாட்கள் கழிந்த நிலையில் பெண்ணின் வீட்டார் திருமணத்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜெயக்குமாரும் வேதனை தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






