70% மக்களை கொரோனா பாதிக்கும் அபாயம்!
குழந்தைகளுக்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 70 சதவீத மக்களை நோய்த்தொற்று பாதிக்கும் என அமெரிக்க பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய சுகாதார மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் போதிய நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை கொரொனா வைரஸ் பரவல் முடிவடையாது என்றார். இதற்கான தடுப்பூசி உருவாக்க 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என பேராசிரியர் குறிப்பிட்டார்.







