--- --:--:-- --

ஊரடங்கின் போது ஆபாச படம் பார்த்தால் கடும் நடவடிக்கை!

1

ஊரடங்கின் போது குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்தால், பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கொள்ளவே டிஜிபி எச்சரித்துள்ளார்.

 

திருச்சி மாநகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே வெளியே வரும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

இந்த நடைமுறை திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வீடுகளுக்கும் நாளைக்கு டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இதில் தனக்கு எந்த மார்க்கெட் என பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கன் பின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon