தஞ்சையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை வாய்ப்பாடு, திருக்குறள் கூறச்சொன்ன போலீஸ்
தஞ்சாவூரில் தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை கொடுத்தனர். ஊரடங்கு உத்தரவின் போது தஞ்சை வடக்கு வீதியில் தேவையில்லாமல் சாலைகளில் உலா வந்த நபர்களை பிடித்த காவல்துறையினர் வாய்பாடு சொல்லவேண்டும்.
திருக்குறளை ஒப்புவிக்கும்படி கூறினர். மேலும் வாகனங்களில் பெயிண்டை கொண்டு வரைந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி எச்சரித்து அனுப்பினர்.






