ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருமா?
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு பொருட்களை நேரடியாக வீடு வீடாகச் சென்று கொடுப்பது போல் ரேஷன் பொருட்களை கொடுக்க முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியூரில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார். முக கவசம், சானிடைசர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறிபுகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.







