--- --:--:-- --

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதிய ரக செயற்கை கோளை உருவாக்கி சாதனை

3

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதியரக செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சாலையில் சீட் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த கிருத்திகா, சுபுஹான ஆகிய இரு மாணவிகள் கூட்டாக சேர்ந்து ஒரு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.

 

பருவநிலை மாற்றங்களை கண்டறிந்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து அடுத்த மாதம் நான்காம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்ட உள்ளது .

Leave a Reply

Right Menu Icon