--- --:--:-- --

பெண்ணை காப்பாற்றச் சென்று உயிரிழப்பு – யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

6

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று யாகேஷ் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் பைக்கில் சென்ற திருவள்ளுவர் யாகேஷ் விபத்தில் உயிரிழந்தார்.

 

யாகேஷ் உடன் சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர்களோடு பெண்ணையும் காப்பாற்ற முயற்சித்த மேலும் 3 இளைஞர்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியை முதல்வர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon