அமைதியை நிலைநாட்ட ஈரானின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் – பிரதமர் மோடி பதிவு
பல்வேறு துறைகளில் ஈரானுடனான இந்தியாவின் நீண்டகால நட்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். வரும் காலங்களில் எங்கள் வர்த்தகப் பரிமாற்றங்களை விரிவுபடுத்தவும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றவும் நாங்கள் விரும்புகிறோம்.
பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதித்தோம். நீடித்த அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




